சூ ரி ய ன்:
காலை வேளை கொஞ்சலாய்சிணுங்கி !
மத்தியில் கருணை காட்ட கெஞ்சவைப்பவன்
என் தோழன் ! மாலையில் இதமாய்
ஆரத் தழுபுவனும் அவனே !!
நி ல வு:
தினமொரு சேதி தருபவன்
பழக இனியவன் ! தேய்விலும்
எனை மகிழ்விப்பவன் ! என் தோழன்
பிரிய மனமில்லா ஈர்ப்பவனும் அவனே !!
கா ற் று:
எந்நேரமும் ஆறுதலாய் ஸ்பரிசமுமாய்...
அந்தரங்க அறை முதல் இடபிங்கலை சுற்றி
சுழுமுனை தட்டி என் சுயத்தை உணர்ந்தவன்
என் தோழன் ! சுவாசம் மூச்சு எல்லாம்
அவனே...!!
அந்தரங்க அறை முதல் இடபிங்கலை சுற்றி
சுழுமுனை தட்டி என் சுயத்தை உணர்ந்தவன்
என் தோழன் ! சுவாசம் மூச்சு எல்லாம்
அவனே...!!
இவர்களின் தோழனாய் என்றும்
சோனாபிரகாஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக